ஏப்ரல் 9ம் தேதி 3 ஜி ஏலம் தொடக்கம்- ஒரு வாரம் நடக்கும்

இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 8 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடக்கும் இந்த ஏலத்தில் நாட்டின் முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
முக்கியமான நிறுவனங்கள் அனைத்துமே இந்த ஏலத்தில் பங்கேற்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என்றும், இந்த ஏலத்தில் வெல்வது அந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதாலேயே இந் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறைந்தபட்ச ஏலத் தொகை 780 மில்லியன் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரசை ஒதுக்கீடு முடிந்த பிறகு, 2 கோடி புதிய சந்தாதாரர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் 545 மில்லியன் வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு பெற்றுள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவாகும்.
இந்த ஏலத்தின் மூலம் 8 பில்லியன் டாலரை இந்திய அரசு பெற்றாலும், இந்தியாவை விட குறைந்த மார்க்கெட் மதிப்பு கொண்ட பிரிட்டன் இதே போன்றதொரு ஏலத்தில் 35 பில்லியன் டாலர்களை ஈட்டியது. கிட்டத்தட்ட 4 மடங்குக்கும் மேல். அதேபோல அமெரிக்கா 19 பில்லியன் டாலர்களை ஈட்டியது. ஆனால் இந்த நாடுகளை விட பல மடங்கு வாடிக்கையாளர்கள், சந்தை மதிப்பு கொண்ட இந்தியாவில் அடிமாட்டு விலைக்கு 3 ஜி அலைவரிசை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது!
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications