பிஎஸ்சி பிஎட் - ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பிஎஸ்சி பிஎட் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாம் பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் பிஎட் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் பேட்டியளித்தார்.

அப்போது, ஆசிரியர் கல்வி பல்கலையில் புதிதாக 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎஸ்சிபிஎட் என்ற ஆசிரியர் பட்டப்படிப்பை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பத்மநாபன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் பிஎட் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.

வரும் கல்வியாண்டு முதல் பிஎஸ்சி பிஎட் இரண்டையும் ஒருங்கிணைந்து 4 ஆண்டுகளில் மாணவர்கள் படித்து முடிக்கும் வகையில் பட்டப்படிப்பு அறிமுகமாக உள்ளது.

வழக்கமான பிஎட் படிப்பில் உள்ளதை விட இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் 4 கற்பித்தல் உள்பட பல பயிற்சிகளை சிறப்பாக மாணவர்கள் பெறுவார்கள். எனவே இந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+