திண்டுக்கல் அருகே ரயில்வே போலீஸ் வீட்டில் 85 பவுன் துணிகர திருட்டு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: வட மதுரையில் போலீஸ்காரர் ஒருவரது வீட்டில் 85 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அய்யலூர் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர் வரிசையாக பெண் வீட்டார் சார்பில் சுமார் 85 பவுன் நகைகள் கொடுக்கப்பட்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டில் வைத்திருந்த நகைகளை மர்ம நபரிகள் வீடு புகுந்து திருடிச் சென்றுவிட்டதாக ஐயப்பன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications