மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும், அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் 90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் வைகோ.
இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications