வெல்லிங்டன் ராணுவக் கல்லூரிக்கு பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்-ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

நாட்டில் உள்ள முக்கிய பாதுகாப்பு நிலைகளை டேவிட் கோல்மேன் ஹெட்லி நேரில் சென்று வீடியோ படம் எடுத்த உளவு பார்த்த்தாக முன்பு தகவல்கள் வெளியாகின.
ஹெட்லி வந்து போன மும்பை மற்றும் கோவாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்ததைத் தொடர்ந்து ஹெட்லி உளவு பார்த்துச் சென்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு நிலைகளில் காணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு நேற்று சென்னையில் நடந்த்து.
இதில் மாநில காவல்துறை உயர் அதிகாரிகளும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் உள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்புத்துறையினரும், மாநில போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணபிபுப் பணிகளை மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் இந்தத் திட்டத்தை இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது












Click it and Unblock the Notifications