For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்யானந்தா ஆசிரமத்தில் ரெய்டு - முக்கிய ஆவணங்கள் சிக்கின

By Staff
Google Oneindia Tamil News

Nityanantha
பெங்களூர்: நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக சிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த சோதனை, நேற்று முழுவதும் நடந்துள்ளது.

நடிகை ரஞ்சிதா உடனான செக்ஸ் தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, தமிழகத்தில் நித்யானந்தாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அவரின் பிடதி ஆசிரமத்தில் கடந்த திங்கள் கிழமை சோதனை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், நீண்ட சோதனையில் ஆசிரமத்தில் இருந்து ஏராளமான முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருந்து படுக்கையறை, மற்ற தடை செய்யப்பட்ட பகுதிகள் என் ஆசிரமம் முழுவதும் சல்லடையாக சலித்து போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்பது குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டபோதிலும், புலனாய்வுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் கடந்த மாதம் சென்னை போலீசில் ஒப்படைத்த 30 சிடிக்களை சிஐடி போலீசார் வீடியோவில் ஓடவிட்டு பார்த்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X