For Daily Alerts
Just In
மதுரையில் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்
மதுரை: ஏட்டு மூலம் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமங்கலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி டிரைவரிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட பொன்ராஜ் என்ற ஏட்டு லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கியது தெரிந்து போலீஸ் உயர் அதிகாரி உத்தரவின் பேரில் பொன்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் இதுபற்றி விசாரணை நடந்தபோது, திருமங்கலம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆன்டனி ஜெகதா சொல்லித்தான் பொன்ராஜ் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து ஜெகதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Story first published: Thursday, April 8, 2010, 17:21 [IST]