கத்தியுடன் வந்த சீக்கியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்
சிகாகோ: அமெரிக்காவின் ஓஹையோவில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கத்தியுடன் வந்த ரவீந்தர் நிஜ்ஜார் என்ற சீக்கியரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.
பெட்பார்ட் என்ற நகரில் வசித்து வந்தவர் ரவீந்தர் நிஜ்ஜார். 41 வயதான இவர், அங்குள்ள குரு கோவிந்த் சிங் சீக்கிய கோவிலுக்கு வந்துள்ளார்.
கையில் பெரிய கத்தியை ஏந்தியபடி, கோவில் பூசாரிகள் இருவரை அவர் துரத்தியபடி வந்தார். இதைப் பார்த்து விட்ட போலீஸார், நிஜ்ஜாரை, கத்தியைக் கீழே போடும்படி சத்தம் போட்டு கூறியுள்ளனர். ஆனால் நிஜ்ஜார் கேட்கவில்லை.
இதையடுத்து அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அங்கேயே சுருண்டு விழுந்து நிஜ்ஜார் உயிரிழந்தார்.
இந்தக் கோவிலுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் நிஜ்ஜார். ஆனால் அவர் கத்தியை ஏந்தியபடி, மிரட்டும் தொனியில் ஏன் வந்தார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications