பொள்ளாச்சி செக் போஸ்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ 23,000 பறிமுதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.23 ஆயிரத்து 970 கைப்பற்றப்பட்டது.
பொள்ளாச்சி வளந்தாயமரம் பகுதியில் வட்டார போக்குவரத்து செக்போஸ்ட் உள்ளது. இந்த செக் போஸ்டை தாண்டி தான் கேரளா செல்ல வேண்டும்.
இதனால் இந்த செக் போஸ்ட் வழியாக வரும் வாகனத்தை நிறுத்தி லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இதனையடுத்து இன்று காலை 6 மணி அளவில் கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சண்முக பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.23ஆயிரத்து 970 கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் (51), உதவியாளர் கோயில்மணி (55) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
லஞ்சம் வசூலிக்க தனிப்பட்ட முறையில் பஞ்சலிங்கம் என்ற 31 நபரை அதிகாரிகள் பணிக்கு அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications