டெல்லி குடோனில் பெரும் தீ விபத்து - பல கோடி நாசம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் துக்ளகாபாத் ரயில்நிலையம் அருகே உள்ள கன்டெய்னர் குடோனில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை சுமார் 5.45 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 22க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையா போராடினர். காலை சுமார் 9 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தெற்கு டெல்லியில் அமைந்துள்ள இந்த கன்டெய்னர் குடோனில் ஏராளமான துணி வகைகள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி நாசமாகி இருக்கும் என தெரிகிறது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications