மோடி குறித்து நான் கூறியதை தவறாக சித்தரித்து விட்டனர் - கோவா முதல்வர்
பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் திகம்பர் காமத், பாஜகவில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு விலகி காங்கிரஸில் சேர்ந்தவர்.
பாஜக பின்னணி கொண்ட காமத், டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டு பேசினார்.
இதுதொடர்பான செய்திகளை படித்த கோவா காங்கிரசார், கடும் அதிருப்தி அடைந்தனர்.
காமத் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர் சுபாஷ் ஷிரோத்கர், கட்சித் தலைமைக்கு புகார் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக காமத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்களுடனும் சுமுக உறவு வைத்துள்ளதாகவும், அந்த வகையில் நரேந்திர மோடியுடனும் நல்லுறவு இருப்பதாக காமத் தெரிவித்துள்ளார்.
மோடி பற்றி நான் பேசியதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு எனது விசுவாசம் குறைந்துவிடாது. காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கை மற்றும் தாராளமய கொள்கைக்கு எவ்விதத்திலும் குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்று காமத் கூறியுள்ளார்.
இதற்கிடையே நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ள விருந்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications