இன்று ஐஐடி நுழைவுத் தேர்வு- 4.72 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐஐடி நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 1026 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட 15 நகரங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இது.
--












Click it and Unblock the Notifications