சிட்னியில் சாலையோரம் இறந்து கிடந்த இந்தியரின் சடலம் மீட்பு
சிட்னி: இந்தியர் ஒருவர் சிட்னி நகரில் சாலையோரம் இறந்து கிடந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்தர் சிங் என்ற இவர் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிகிறது.
சாலையோரம் இறந்து கிடந்ததை சிட்னி நகர போலீசார் இன்று காலை பார்த்துள்ளனர்.
உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
அவர் எப்படி இறந்தார், பின்னணி என்ன என்பது பற்றிய விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டு காலத்துக்குள் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் இன்று மற்றொரு இந்தியர் சாலையோரம் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்தர் சிங் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரியவரும் என சிட்னி நகர போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications