18ம் தேதி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கட்சி ஆரம்பித்தது முதல் இதுவரை எந்தவித பாதிப்பையும், யாருக்கும் ஏற்படுத்தாத ஒரே கட்சியாக திகழ்கிறது சமத்துவ மக்கள் கட்சி. கட்சி செயல்படுகிறதா என்று மற்றவ்ரகள் கிண்டலடிக்கும் அளவுக்கு செயலற்றுப் போய்க் கிடக்கிது இக்கட்சி.
இந்த நிலையில் திடீரென கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கோவையில் வருகிற 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்குகிறார். இதில், தொலைநோக்கு பார்வையோடு, நாட்டு மக்கள் நன்மை கருதி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, துணை பொதுசெயலாளர் என்.சண்முக சுந்தரம் தலைமையில் கோவை மாவட்ட செயலாளர்கள் கணேசன், ஜெய்சங்கர், நேருஜி, திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் ரத்னா ஜெ.மனோகர், எம்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications