ஆலடி அருணா வழக்கு: ஆயுள் கைதி அழகர் மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி அழகரை பாளை சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் அழகர் என்ற வளர்ந்த அழகர். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இவருக்கு நெல்லை நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது. இதன் பின்பு அழகர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் தனக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், எனவே தன்னை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அழகர் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதஙகளை கேட்ட நீதிபதி பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் ஆயுள் கைதி அழகரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+