மருத்துவ உபகரணங்கள் இறக்குமதியில் முறைகேடு - பிஷப்புக்கு சுங்கத்துறை அபராதம்!
சென்னை: அமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பேராயர் தேவசகாயம். சென்னையில் பேராயத்துக்கு சொந்தமான கல்யாணி மருத்துவமனை உள்ளிட்டவை இவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.
இந்த மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களின் மூலமாக பல்வேறு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வருவதுண்டு.
இந்தநிலையில் வேர்ல்ட் மெடிக்கல் ரிலீஃப் என்ற யூஎஸ் நிறுவனம், நகரியில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் மூலமாக அனுப்பியது.
எக்ஸ்ரே கருவிகள், டயலசிஸ், இசிஜி இயந்திரங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டன.
இவற்றை இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. விசாரணையில், பொருட்களின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டு, குறைந்த அளவு வரி கட்டியிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சென்னை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் பேராயர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், 'அமெரிக்காவில் இருந்து ரூ.2.22 கோடி மதிப்புள்ள மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 142 வரியாக செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் அவற்றை குறைத்து மதிப்பிட்டு குறைவாக வரி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது.
அதிக அளவு மதிப்புள்ள இதுபோன்ற பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், வரிச் சலுகைக்காக அரசை ஏற்றுமதியாளர்கள் அணுகலாம்.
சுங்கத் துறை சட்டத்தின்படி முறைகேடாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டுவிட்டன.
எனவே, நகரியில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம், ரூ.1.34 கோடி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும். டாக்டர் ராஜகுமாரி சுந்தர், பிஷப் தேவசகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஏசுவின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக நடந்துள்ளனர். வரி செலுத்துங்கள் என்றுதான் ஏசு கூறி இருக்கிறார்' என்று சுங்கத்துறை கமிஷனர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications