இத்தாலியில் நிலச்சரிவால் ரயில் கவிழ்ந்து 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரோம்: இத்தாலியின் வடக்குப் பகுதியில் பொல்சானா என்ற நகரத்துக்கு அருகே மலைப்பகுதியில் ரயில் தடம்புரண்டு கவிழ்ந்ததில் 7 பயணிகள் பலியானார்கள்.
25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை இத்தாலியின் மிக நவீன தண்டவாளமாக கருதப்பட்டு வந்தது.
ரயில் பாதையின் அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு கோச்சுகள் கொண்ட இந்த ரயிலில் பெரும்பாலும், உள்ளூர்வாசிகள் மற்றும் மாணவர்ள் இருந்துள்ளனர்.
பலியானாவர்களில் அனைவரும் முதல் கோச்சில் பயணம் செய்தவர்கள். இரண்டாவது கோச்சில் இருந்தவர்கள் அருகில் இருந்த பகுதியில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications