மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கப்படவில்லை – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வை ஏற்கனவே ஆணையம் நிர்ணயித்து விட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இதுதொடர்பாக பெறப்பட்டுள்ள கருத்துருக்கள் குறித்து இதுவரை ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அறிவித்தப்படி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அது முடிவடைந்த பின்னர் தமிழக அரசின் எரி சக்தித் துறை, நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
மே அல்லது ஜூன் மாதத்தில்தான் இந்த முடிவு அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து முடிவுகள் அமலுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications