ஆஸியில் இந்திய மாணவர் மீது கடும் தாக்குதல் - பார்வை பறிபோனது

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

தன்னை தாக்கிய இனவெறியாளர்கள், 'உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போய்விடு' என அதட்டியதாக இந்திய மாணவர் கூறியுள்ளார்.

நீரஜ் பரத்வாஜ் என்ற 23 வயது இந்திய மாணவர் கடந்த திங்கள் கிழமை மெல்போர்ன் அக்வாரியம் அருகே அமர்ந்துகொண்டிருந்தார்.

அப்போது போதையில் இரண்டு பேர் இவரின் அருகே வந்துள்ளனர். வெள்ளையினத்தவராக அறியப்பட்ட அவர்களின் வயது 20களில் இருக்கும் என ஆஸ்திரேலிய பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவியாக உட்கார்ந்து கொண்டிருந்த நீரஜ்ஜிடம் இரண்டு நபர்களும் வந்துள்ளனர். பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுக்குமாறு நீரஜ்ஜை மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சியில் விழித்த நீரஜ் பர்சை தர முடியாது எனக்கூறியுள்ளார். உடனே சரமாரியாக நீரஜ்ஜுக்கு குத்து விழுந்துள்ளது.

அதற்கு பின் நீரஜ் நினைவை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நீரஜ்ஜுக்கு சுய நினைவு திரும்பி மெல்ல எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.

அப்போது மீண்டும் அங்கு வந்த இரண்டு மேரும் மறுபடியும் தாக்கியுள்ளனர்.

அப்போது, அந்த இரண்டு பேரும் நீரஜ்ஜை நோக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, 'உன் சொந்த நாட்டுக்கு ஓடிவிடு' எனக் சத்தம் போட்டுள்ளனர்.

நீரஜ்ஜுக்கு வலது கண்ணில் கடுமையான அடிபட்டு, 90 சதவீத பார்வை திறன் பறிபோய்விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் நீரஜ்ஜின் மூக்கு உடைபட்டுவிட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த நீரஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+