மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் திருத்தியமைப்பு!
டெல்லி: மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் இருப்பார். 14 மத்திய அமைச்சர்கள், 30 மாநில் முதல்வர்கள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் இதி்ல் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிருந்தா கராத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் உட்பட 19 அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத் சிங், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன், ரத்தன் டாடா உள்ளிட்டோரும் இந்த கவுன்சிலில் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications