அகத்தியருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி பாபநாசத்தில் குவியும் பக்தர்கள்
விகேபுரம்: பாபநாசம் கோவிலில் இன்று சுவாமி அகத்தியருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை காண பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய திருவிழாவான இன்று அகத்தியருக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கோயில் நடை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை நடந்தது. மதியம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழாவும், இதை தொடர்ந்து அதிகாலை 1 மணிக்கு சுவாமி அம்பாள் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுக்கிறார். இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் பாபநாசத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications