ஜனாதிபதி மாளிகைக்கு சோனியா பேசுவதாக போலி போன்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஜனாதிபதி மாளிகைக்கு போலி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இது குறித்து உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அது பொதுத் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்பு என்பதால் அது போலியான அழைப்பு என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி மாளிகையின் தொலைபேசி மையத்தினர், அவரிடம் நீங்கள் யார் என்று விவரம் கேட்கவே அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
மீண்டும் இரவு 9 மணிக்கு அவர் அழைத்து சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறவே, அவரிடம் உங்கள் எண்ணை கொடுங்கள்; நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்றனர்.
இதையடுத்து அந்த நபர் இந்த விவகாரத்தை உயர்மட்ட அளவில் எடுத்துச் செல்வேன் என்று கூறியபடி ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அவரது அழைப்பை டிரேஸ் செய்தபோது, அதுவும் ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் போலீசில் புகார் செய்ததையடுத்து உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications