தமிழக விவசாயிகளுக்கு ரூ.2500 கோடி பயிர்க்கடன்!
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ 2500 கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கோ.சி. மணி பேசியதாவது:
2009-2010ம் ஆண்டில் ரூ.2,000 கோடி அளவிற்கு பயிர்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த குறியீட்டையும் தாண்டி பயிர்க்கடன் ரூ.2,169 கோடிக்கு வழங்கப்பட்டது. 2010-2011ம் ஆண்டில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக ரூ.23,793 கோடிக்கு வைப்பு தொகை உள்ளது. விவசாய விளைபொருட்கள் விற்பனையில் இருமடங்கு சாதனை புரிந்து கூட்டுறவு விற்பனை சங்கங்கள் அனைத்தும் லாபத்தில் செயல்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 22,145 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 10,000 குழுக்கள் உருவாக்கப்பட்டு ரூ.10 கோடி சுழல் நிதி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 கோடி கடன் வழங்கப்படும். குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்புகள்- நீண்டகால கூட்டுறவு கடன் அமைப்பு மூலம் வேளாண் பணிகளுக்கு ரூ.300 கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும்.
சிறு வணிக கடன் ரூ.5,000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.150 கோடிக்கு தானிய ஈட்டு கடன் வழங்கப்படும். 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் சேவை மையம் தொடங்கப்படும்.
திருவள்ளூர், தர்மபுரி, கடலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் கூட்டுறவு அலுவலக வளாகங்கள் கட்டப்படும். பொள்ளாச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.50 லட்சம் செலவில் தேங்காயை கொப்பரையாக மாற்றும் நிலையம் அமைக்கப்படும்.
கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.25 கோடிக்கு தரமான விதைகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு நம்பகமான தரமான மருந்து நியாயமான விலையில் கிடைக்க கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 50 மருந்து கடைகள் கூடுதலாக தொடங்கப்படும்.
நகை அடமானம் கேட்டால்...
ராஜாஅண்ணாமலை புரம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் ரூ.1 கோடி செலவில் சுய சேவை பிரிவுகளை நவீனமயமாக்கி விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகை ஈட்டின்பேரில் மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படும் என்று எங்கேயாவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்களை நிரப்ப இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் கோ.சி.மணி.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications