தமிழகத்தில் ரூ. 1000 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த 'பளிச்' சாலைகள் அமைக்க திட்டம்

மதுரையில், நகர்ப்புற மேம்பாடு நிதி மற்றும் கட்டமைப்பு கழக ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் நகர்ப்புற மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், புதிய சாலைகள் அமைத்தல் , நடைபாதை மற்றும் மின் வசதி குறித்து பல கட்டமாக விவாதிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் 11 நகரங்களில் சர்வேதேச தரம் கொண்ட புதிய ரோடுகள் அமைக்கப்படவுள்ளன. முன்னதாக இந்த ரோட்டில் கேபிள்கள் எல்லாம் தரைக்கு அடியில் முன்கூட்டியே புதைக்கப்பட்டு விடும். எனவே 5 ஆண்டு வரை இந்த ரோடுகளை தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கென தமிழக அரசு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் சீனிவாசன்.
மதுரைக்கு 750 கிலோமீட்டர் சாலை
இந்தத் திட்டத்தின் கீழ் மதுரையில் மட்டும் 750 கி.மீட்டர் தூரம் கொண்ட ரோடுகள் அமைக்கப்படும். புதிய ரோட்டில் மின் வெளிச்சத்திற்கு பஞ்சம் இருக்காது.பளபளக்கும் விதி மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்படுமாம்.
இந்தப் புதிய சாலைகள் அமைக்கும் பணி ஒரு ஆண்டில் தொடங்கி மேற்கொள்ளப்படும். இவற்றை தனியார் மூலம் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications