ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 100 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
மதுரை: ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 100 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத் திரும்பப் பெறக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளனராம்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடந்த மார்ச் 17ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 100 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சிவகங்கையில் 20 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தென் சென்னையில் தலா 14 பேர், கோவை, குமரியில் தலா 10 பேர், ஈரோட்டில் 8, ஊட்டியில் 7, விழுப்புரத்திதல் 6, மதுரையில் 5, கடலூர், மத்திய சென்னையில் தலா 3 பேர் என மொத்தம் 100 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.
இந்த நீக்கத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அது இதற்காக போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications