For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீராணம் ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர திட்டம்!

By Muthukrishnan
Google Oneindia Tamil News

சென்னை: வீராணம் திட்டத்துக்காக அமைக்கப்ட்ட ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

பூண்டி ஏரியில் 1,606 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 2,613 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 2,375 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருக்கிறது.

சோழவரத்தில் 105 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வீராணத்தில் 556 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இந்த
ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீர் கடந்த ஆண்டு இதே நாளில் தண்ணீரை ஒப்பிடும்போது சுமார் 1,500 மில்லியன் கனஅடி குறைவாகும்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர், கடந்த ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 6 டிஎம்சி வரை வந்துள்ளது. ஆனால் இந்த முறை 7.11 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டு பருவமழை சென்னை பகுதியில் குறைவாகப் பெய்ததால், கிருஷ்ணா தண்ணீர் ஓரளவு கை கொடுத்துள்ளது.
தற்போது கிருஷ்ணா கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடப்பதாலும், கோடை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் ஆவியாகி வீணாகும் என்பதாலும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் 6.3 டிஎம்சி தண்ணீர் இருந்தாலே சென்னைக்கு தண்ணீர் விட முடியும். இப்போது 19.64 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது.

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கிவிடும். எனவே மீண்டும் ஜூன் மாதம் கிருஷ்ணா தண்ணீர் வர வாய்ப்புள்ளது.

தற்போது குடிநீர் ஏரிகளில் இருக்கும் தண்ணீர் டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு வினியோகிக்க போதுமானது. எனவே, இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என நம்பப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இந்தமாத இறுதியில் இந்த தண்ணீர் நிறுத்தப்படுகிறது.

இதற்கு பதிலாக அடுத்த மாதம் முதல் வீராணம் ஏரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளது.

சென்னை நகரில் இப்போது தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X