தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: ரயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கரூரில் ரயில் பயணிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கரூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத்தில், கரூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி , சிற்பபு ரயில்கள் வந்து செல்லும் நேரம், அதுகுறித்த தொலைபேசி சேவை, இரண்டு சக்கர வாகனங்கள் பாதுகாப்பு மையத்தில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை, திருச்சி - கரூர் ரயிலில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து பயணிகளஅ இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.
கரூர் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் அண்ணா மற்றும் பலர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணி அளவில் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications