நிலப்பிரச்சினை – நாமக்கல் அருகே 3 பேர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நிலப்பிரச்சினை தொடர்பாக நாமக்கல் அருகே 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அருகே உள்ளது நலக்கண்ணி கிராம்ம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த மோதல் முற்றி இன்று கொலையில் முடிந்தது. இன்று காலை சபாபதி, ராஜேந்திரன், வெள்ளையன் ஆகிய மூன்று பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்து 7 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications