'பார்வதி அம்மாள்'-மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

அவர் பேசுகையில்,
பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள்.
இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள்.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்க அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மறுத்தது ஏன்?. இதுபற்றி மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அதே போல மாநிலங்களவையிலும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, பாஜக உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் இந்தப் பிரச்சனையை எழுப்பினர்.
ராஜா பேசுகையில், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத பார்வதி அம்மாளை விசா வழங்கிய பிறகு, விமானத்தில் இருந்து கூட இறங்கவிடாமல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல். அவர் சென்னையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications