ஆறு மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கிய திருமாவளவன்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆறு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முற்றிலும் களப்பணி ஆற்ற இயலாதவர்களும், களப்பணிக்கு ஒத்துழைக்காதவர்களும் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீலமலை, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை புறநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட செயலாளர்கள், அவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நீலமலை - சகாதேவன், தர்மபுரி - மாரவாடி ராமன், திண்டுக்கல் - வில்லவன் கோதை, ராமநாதபுரம் - இளையான்குடி கோபால், நெல்லை புறநகர் - எம்.சி.கார்த்திக், கன்னியாகுமரி - ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட துணை செயலாளர் மங்கலம் கருப்பையா ஆகியோர் கட்சி மற்றும் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அப்பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications