துபாயில் கற்பழிப்பு-லண்டன் பெண்ணுக்கு சிறை?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: துபாயி்ல் இரவில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்தபோது தன்னை ஒருவர் கற்பழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய பெண்ணுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த அந்த 24 வயதுப் பெண் சமீபத்தில் துபாய் மெரீனா பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தினார்.

இதையடுத்து தன்னுடன் மது அருந்திய ஒரு நபர் தனக்கு காரில் லிப்ட் கொடுத்தார் என்றும், அப்போது தன்னை பாலைவனப் பகுதிக்குக் கொண்டு சென்று கற்பழித்துவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.

ஆனால், அந்தப் பெண்ணின் சம்மத்துடன் தான் உடலுறவு கொண்டதாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பாலைவனத்தில் மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணுடன் அவரது வீட்டிலும் போய் உடலுறவு வைத்துக் கொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனால் திருமணம் செய்யாமலேயே உடலுறவு கொண்ட குற்றத்துக்காகவும் பொது இடத்தில் குடித்ததற்காகவும் அந்தப் பெண்ணுக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று லண்டனின் சன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+