For Quick Alerts
For Daily Alerts
Just In
கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு-காய்கறி விலை கடும் உயர்வு
சென்னை: கொளுத்தும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துவிட்டதால் அவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவை வருகின்றன.
அதே போல கர்நாடகா, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன.
ஆனால் கடும் வெயில் காரணமாக காய்கறிவிளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறி வரத்து குறைந்துவிட்டது.
இதனால் காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
பீன்ஸ், கேரட், பட்டாணி, தக்காளி என அனைத்து வகை காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, April 21, 2010, 12:21 [IST]