சஷாங்க் மனோகர் ஐபிஎல் தலைவராக அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு

ஐபிஎல்லின் அடுத்த தலைவராக கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகரை நியமிக்க ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
மோடியின் திறமை மனோகருக்குக் கிடையாது. எனவே அவரால் மோடியைப் போல திறம்பட ஐபிஎல்லை நிர்வகிக்க முடியாது என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். மனோகரே ஐபிஎல் தலைவராகவும் செயல்படலாம் என்று சரத் பவார்தான் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 26ம் தேதி ஐபிஎல்லின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மோடி நீக்கப்படுவது உறுதியாகி விட்டால், புதிய திட்டம் ஒன்றை கூட்டத்தில் முன்வைக்க ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அது:
- ஐபிஎல் அணிகள் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை ஐபிஎல் ஆணையராக நியமிக்கும். சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் ஐபிஎல் உரிமையாளர்கள் மாறி மாறி இருப்பார்கள்.
- ஐபிஎல்லின் துணைத் தலைவர் பதவிக்கு கிரிக்கெட் வாரியமே யாரையாவது நியமிக்கலாம்.
- ஐபில் நிர்வாக்க் குழுவை கிரிக்கெட் வாரியே கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான குழுவில் மோடி கண்டிப்பாக ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் ஐபிஎல் உரிமையாளர்களின் இந்த யோசனையை கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications