சென்னை அருகே போலி டாக்டர் கைது – அவரை மிரட்டிப் பணம் பறித்தவரும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்தனர். அவரை மிரட்டிப் பணம் பறித்த நபரையும் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரியில் ஜானகி கிளினிக் என்ற பெயரில் ஒரு கிளினிக் இயங்கி வந்தது. அங்கு டாக்டர் ஆறுமுகம் என்பவர் வைத்தியம் பார்த்து வந்தார்.
அவரது சிகிச்சை முறை சந்தேகம் அடைந்த சிலர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் இன்று அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஆறுமுகம் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
கடந்த பத்து வருடமாக போலி டாக்டராக வலம் வந்துள்ளார் ஆறுமுகம். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதை விட காமெடியாக போலி டாக்டர் ஆறுமுகத்தை மிரட்டிப் பணம் பறித்த சுப்ரமணி என்பவரையும் போலீஸார் சேர்த்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications