கோவில்பட்டி ஜவுளிக் கடையில் தீ –லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் மதி்ப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஐந்துமாடிகள் கொண்ட பிரபல ஜவுளி கடை ஓன்று உள்ளது. கட்டிடத்தின் மேல்மாடியில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் மின்கசிவினால் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜவுளி எடுக்க வந்தவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர். ஆனால் கடையில் ஏற்பட்ட தீ மேலே உள்ள 2 மாடிகளில் மட்டும் எரிவது போல் தெரிந்தது. அதை நேரத்தில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளேயே புகைந்து கொண்டிருந்தது.
ஆனால் கட்டிடத்திற்குள் நுழைய முடியாமல் தீ எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தனியார் மரம் ஏற்றும் கிரேன் கொண்டு வரப்பட்டு கட்டிடத்தின் முன்புற ஷோகேஷ் வழியாக நுழைய முயற்சி எடுத்தும் பயனில்லை. இந்நிலையில் இரண்டு மாடிகளில் எரிந்து கொண்டிருந்த தீ திடீரென அக்னியை கக்கி கொண்டு பீறிட்டு வெளியேறியது. இதில் கட்டிடமும் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாகின.












Click it and Unblock the Notifications