பாளை சிறையில் செல்போனில் பேசுவதை தடுக்க டிடெக்டர்கள் பொருத்த முடிவு
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் செல்போனில் பேசுவதை தடுக்க நவீன செல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் சிறைகளில் கைதிகள் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை நவீன யுத்தி மூலம் கடத்தி வருகின்றனர். செருப்புகள் மறைத்தும், திண்பண்டங்களுக்குள் மறைத்தும் கடத்தி செல்கிறார்கள்.
சென்னை, புழல், திருச்சி, மதுரை சிறைகளில் கிரிக்கெட் பந்துக்குள் போதை பொருளை மறைத்து வைத்து ஜெயில் மதில் சுவர் வழியாக உள்ளே வீசுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சதாரணமாக கடத்தப்படுகின்றன.
கைதிகளிடையே செல்போன்களும் தாராளமாக புழங்குகின்றன. சிறை அதிகாரிகள் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தி செல்போன், சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகிறது. சிறை காவலர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால்தான் செல்போன்களை எளிதாக உள்ளே கொண்டு செல்ல முடிகிறது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கமண்டோ படையினரும் கைதிகள் அறையில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. எனவே கைதிகள் செல்போனில் பேசுவதை தடுக்க செல் டிடேக்டர் என்ற நவீன கருவியை முக்கிய சிறைகளில் பொருத்த சிறை துறை ஏடிஜிபி ஷியாம் சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் விலை 1.5 லட்சமாகும். இதன் மூலம் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொருட்களை சோதனையிட ஸ்கேனர் கருவிகளும் வாங்கப்பட உள்ளது. ஒரு ஸ்கேனர் கருவியின் விலை ரூ.18 லட்சமாகும்.
கைதிகள் செல்போனில் பேசுவதை கண்டுபிடிக்கும் செல் டிடேக்டர் என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் கைதிகள் செல்போனில் பேசுவதை கண்டுபிடித்து விடலாம். சுமார் 100 அடி தூரத்திற்குள் செல்வைத்து பேசினால் செல் டிடேக்டர் கருவியின் சிக்னலில் எந்த கைதி செல் வைத்துள்ளார் என்பது தெரிந்து விடும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications