மு.க.அழகிரி எங்கே?: ராஜ்யசபாவில் அதிமுக கேள்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி நாடாளுமன்றத்துக்கு வராதது குறித்து இன்று அதிமுக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியது.
ராஜ்யசபாவில் இன்று துணைக் கேள்வி எழுப்புவதற்காக எழுந்த அதிமுக, எம்.பி. மைத்ரேயன், தற்போது வெளிநாட்டில் (மாலத்தீவு) இருக்கும் அமைச்சர் ஒருவர் (அழகிரி) அங்கு செல்வதற்கு முன்னர் அது குறித்து அவைத் தலைவரிடம் முன் அனுமதி பெற்றாரா என்று கேட்டார்.
இது குறித்து பிறகு விவாதிக்கலாம் என்று அவைத் தலைவர் கூறியும், மைத்ரேயன் தொடர்ந்து அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவருடன் சேர்ந்து பாஜக எம்பிக்களும் இதே கேள்வியை எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நேற்று இந்த விவகாரத்தை மக்களவையில் பாஜக கிளப்பியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications