வங்கிகளின் கடன் வழங்கும் திறனை உயர்த்த ரூ.15,000 கோடி மத்திய அரசு நிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமையை வலுப்படுத்த ரூ 15000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதற்கான அறிவிப்பினை அரசு இன்று வெளியிட்டுள்ளது.

2010-2011 நிதியாண்டில் வங்கிகளின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது.

அனைத்து அரசுத் துறை வங்கிகளையும் வலுப்படுத்த ரூ 15000 கோடியை உள்ளீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுய வேலைவாய்ப்பு, நிறுவன மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதி ஆண்டும் இதே போன்ற தேவை ஏற்படும்பட்சத்தில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ 15000 கோடி மூலம், அரசுத் துறை வங்கிகளின் கடன் வழங்கும் திறன் ரூ 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+