இந்தோனேசியாவில் தாக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள்
பதாம்: இந்தோனேசியாவின் பதாம் தீவில் துறைமுகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்தோனேசிய நாட்டு தொழிலாளர்களை முட்டாள் என்று திட்டியதையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது.
பி.டி. டிரைடாக் வோர்ல்ட் என்ற துறைமுகத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
அங்கு பணியில் இருந்த 41 இந்தியத் தொழிலாளர்களை, சுமார் 5,000 இந்தோனேசிய தொழிலாளர்கள் பயங்கரமாகத் தாக்கினர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் படகுகள் மூலம் சிகி்ச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் கூடி இந்திய அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டு்க்குள் கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications