'தலிபான்களுக்கு அணு ஆயுதம் தர பாக். சதி செய்யலாம்'
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டாலோ அல்லது காஷ்மீர் பிரச்சனை மிகவும் தீவிரமானாலோ தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை தலிபானிடம் தந்து அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வைக்க பாகிஸ்தான் சதி செய்யலாம் என்று அமெரிக்க அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
Prevention of WMD proliferation and terrorism என்ற அமைப்பின் தலைவர் பாப் கிரஹாம் அமெரி்க்க நாடாளுமன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனை மிகவும் சிக்கலாகி இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டால் இப்படி ஒரு மகா பாதகமான செயலை பாகிஸ்தான் செய்யலாம்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தலிபான்கள் நீண்ட நாட்களாகவே குறி வைத்துள்ளனர். தலிபான்-பாகிஸ்தான் ராணுவத் தொடர்புகள் உலகறிந்தவை.
தலிபான்கள் வசம் அணு ஆயுதங்கள் சிக்கிவிடாமல் தடுக்க வேண்டியது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமை. அந்த ஆயுதங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தானுடன் இணைந்து தான் நாம் செயல்பட்டாக வேண்டும்.
அதே போல வெள்ளை மாளிகைக்கும் இந்திய, பாகிஸ்தான் உயர் மட்ட தலைவர்களுக்கும் இடையே ஒரு 'ரெட்போன்' தொடர்பை ஏற்படுத்துவதும் அவசியம். மிக அவசரமான காலகட்டங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications