சென்னை விமான நிலையத்துக்கு வந்த துப்பாக்கிகள்-புரோக்கர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு சரக்கு மூலம் துப்பாக்கிகள், சைலன்சர்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக பாஸ்போர்ட் புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலைய சரக்கு பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி துபாயில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் துப்பாக்கிகள், சைலன்சர்கள் மற்றும் துப்பாக்கி உதிரி பாகங்கள் இருந்தன.
அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக விமான நிலைய சரக்குப் பிரிவு ஊழியர்கள் அயூப்கான், பழனீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழியைச் சேர்ந்த விஜயன் என்பவரது பாஸ்போர்ட் ஆவணம் இணைக்கப்பட்டு இந்த பார்சல் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜயனும் கைது செய்யப்பட்டார்.
விஜயனிடம் விசாரித்தபோது தனது பாஸ்போர்ட்டை சில மாதங்களுக்கு முன் புரோக்கர் முகமது சேக் என்பவர் வாங்கிச் சென்றதாகக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக முகமது சேக்கை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று தனிப்படையினரால் சென்னை பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து இந்த ஆயுதங்கள் அனுப்பியது யார் என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications