மோடி தொடர் பிடிவாதம் – பிசிசிஐ நிர்வாகிகள் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மும்பை : ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திறகு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தினர்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில், தலைவர் சஷாங்க் மனோகர், செயலாளர் சீனிவாசன், தலைமை செயலதிகாரி ரத்னாகர் ஷெட்டி, ஐபிஎல் துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி விலக முடியாது என்று மோடி தொடர்நது பிடிவாதமாக இருக்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் மோடியை நீக்குவது தொடர்பாகவும், இதுகுறித்த தீர்மானம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications