காற்றழுத்தத்தில் சிக்கி விபத்துக்குள்ளான விமானம் – 12 பேர் காயம்
கொச்சி: துபாய் – கொச்சி இடையிலான எமிரேட்ஸ் விமான் கோவா மீது பறந்து கொண்டிருந்தபோது காற்றழுத்த்த்தில் சிக்கியது. இருப்பினும் விமானியின் சாதுரியத்தால் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
துபாயிலிருந்து கொச்சிக்கு எமிரேட்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. கோவா மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காற்றழுத்தத்தில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விமானம் கீழ் நோக்கி வேகமாக இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். சிலர் தடுமாறி இருக்கையிலிருந்து விழுந்தனர்.
இருப்பினும் விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை சகஜ நிலைக்குக் கொணடு வந்தார். பின்னர் விமானம் கொச்சிக்கு வந்து சேர்ந்தது.
அதன் பின்னர் இருக்கையிலிருந்து விழுந்து காயமடைந்த 12 பயணிகள் அங்கமாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் 361 பயணிகளும், 14 ஊழியர்களும் இருந்தனர்.












Click it and Unblock the Notifications