For Daily Alerts
Just In
கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் போராட்டம் தள்ளிவைப்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரும் ஏப்ரல் 27-ம் தேதி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நடத்தவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநில தலைவர் பி.சகிலன் வெளியிட்டுள்ள இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க எங்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அன்று பல அரசியல் கட்சிகள் பல போராட்டங்களை நடத்த உள்ளதால் எங்கள் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட 27-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை தள்ளிவைக்கிறோம். போராட்டத்துக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Comments
Story first published: Sunday, April 25, 2010, 11:21 [IST]