For Daily Alerts
Just In
2013-ல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது! - தநா மின்வாரிய தலைவர்
ஆசியா ஸ்டடி சென்டர் வெளியிட்டுள்ள, தமிழகத்தில் மின்சார உற்பத்தி, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் ஆகிய இரு புத்தகங்களை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டு சி.பி.சிங் பேசியதாவது:
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
தமிழகத்துக்கு இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,500 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி உள்ளது. புதிய முயற்சிகள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் வழங்கப்படும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என்றார்.
Comments
Story first published: Sunday, April 25, 2010, 11:18 [IST]