For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலி

Google Oneindia Tamil News

யாஸூ சிட்டி (மிஸிஸிபி): அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.

உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 12க்கும் மேறபட்டோர் காயமடைந்தனர்.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் மேற் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாக்டாவ் என்ற பகுதியில் 5 பேரும், யாஸூ நகரில் 4 பேரும், ஹோம்ஸ் பகுதியில் ஒருவரும் சூறாவளிக்கு உயிரிழந்தனர்.

சூறாவளிக்கு யாஸூ நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிஸிஸிபி மாகாணத்தில் 15 நகரங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X