ஸ்ரீரங்கம் கோவிலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மகன் தரிசனம்
ஸ்ரீரங்கம் குடிய.ரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர பிரசாத் ஷெகாவத் இன்று திடீரென ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டார்.
ஷெகாவத், இன்று காலை தனியாக விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற அவர், தன்வந்திரி சன்னதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அமைதியாக அமந்திருந்தார்.
பின்னர் தாயார் சன்னதி, கோவிலின் மூல ஸ்தானத்தில் தரிசனம் செய்த அவர், கோவிலை சுற்று வந்தார். அப்போது ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு வெள்ளி கிரீடத்தை அன்பளிப்பதாக வழங்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.
பொதுவாக, குடும்பத்தாருக்கு அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கு உடல்நிலை குன்றியிருந்தால், தன்வந்திரி சன்னதியில் அமைதியாக தியானம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் பிரதீபா பாட்டீலின் மகன் திடீரென ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக அமர்ந்திருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications