சிவகிரியில் போலீசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சிவகிரி: சிவகிரியில் பொது வேலை நிறுத்தத்தின் போது கம்யூ கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுக கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதுகுறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெல்லை மாவட்டத்தில் நேற்று சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில், மேலப்பாளையம், களக்காடு, வள்ளியூர், நெல்லை ஜங்ஷன் உள்பட பல இடங்களில் முழு வேலை நிறுத்தம் நடைபெற்றது. பஸ்கள் இயக்கப்பட்ட போதும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணம் செய்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

சிவகிரியில் சிபிஎம் அலுவலகம் நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்த அக்கட்சியினரை போலீசார் மறித்து 4 பேர்களுக்கு மேலாக செல்லகூடாது என கூறி கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது பெருமாள், குருசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர்.

தட்டிக் கேட்ட போலீஸ் வேனில் இருந்த இந்திய கம்யூ செயலாளர் தங்கவேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, இளைஞர் மன்ற தாலுகா செயலாளர் முத்துசாமி ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.

சிவகிரி போலீசாரின் இந்த செயலை அனைத்து கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரை கண்டித்து இன்று 28ம் தேதி மாலை சிவகிரியில் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறதுஎன்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+