பெண்ணை கொலை-தோடுகளுக்காக காதுகள் அறுப்பு
சென்னை: சென்னையில் சலவைத் தொழிலாளி பெண்ணை கொலை செய்த நபர் அவர் அணிந்திருந்த தோடுகளுக்காக காதுகளை அறுத்துச் சென்றார்.
சேத்துப்பட்டு போலீஸ் நிலையம் உள்ள சலவை கூடத்தில் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து சலவை தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு கணவரை இழந்த சுப்பம்மாள் (65) என்ற பெண்ணும் தனியாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
சுப்பம்மாளிடம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாடசாமி (45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சலவை வேலை பார்த்து வந்தார். மாடசாமிக்கு தினமும் 300 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார் சுப்பம்மாள்.
இந் நிலையில் நேற்றிரவு நன்றாக குடித்துவிட்டு வந்ச மாடசாமி, சுப்பம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்பம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த 1.5 பவுன் செயினை பறித்த மாடசாமி, காதில் இருந்த 1 பவுன் கம்மலை கழற்ற முயன்றார்.
ஆனால் முடியாமல் போனதால் 2 காதுகளையும் வெட்டி எடுத்துக் கொண்டு தப்பினார்.
இந்தக் கொலை சம்பவம் இன்று காலை தான் மற்றவர்களுக்குத் தெரியவந்தது. கொலையாளி மாடசாமியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications