போலி, காலாவதி மருந்து-மருத்துவத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிடிஐடி ரெய்ட்
சென்னை: போலி, காலாவதி மருந்துகள் விவகாரத்தில் தமிழக மருத்துவத்துறை அதிகாரிகளின் வீடுகளில் சிபிடிஐடி அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக மருத்துவத்துறை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணனின் சென்னை ராமாவரம் வீட்டில் இன்று பிற்பகலில் இருந்து ரெய்ட் நடந்தது.
அதே போல மருந்து ஆய்வாளர் விஜய்குமாரின் கீழ்பாக்கம் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடந்தாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலி லேபிள்கள்-சென்னை அச்சக அதிபர் கைது:
இந்நிலையில் போலி மருந்து விற்பனை செய்த வழக்கில், அச்சக அதிபர் ஒருவர் சீனிவாசன் (வயது 46) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இவர் போலி மருந்து பாட்டில்களில் ஒட்ட லேபிள்களை அச்சடித்து தந்துள்ளார்.
போலி மருந்து வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய்குமார் இவரிடமிருந்து போலி லேபிள்களை வாங்கியுள்ளார்.
காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை தொடர்பாக இதுவரை மீனாட்சி சுந்தரம் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications